TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காதலர் தினத்தில் இரத்த தானம்! யாழ். ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரிச் செயற்பாடு.

Go down

காதலர் தினத்தில் இரத்த தானம்! யாழ். ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரிச் செயற்பாடு. Empty காதலர் தினத்தில் இரத்த தானம்! யாழ். ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரிச் செயற்பாடு.

Post by மாலதி Tue Feb 18, 2014 8:00 am

காதலர் தினத்தில் இரத்த தானம்! யாழ். ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரிச் செயற்பாடு.
காதலர் தினத்தில் இரத்த தானம்! யாழ். ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரிச் செயற்பாடு. 1800437_539382856160402_455205321_n
யாழ்.ஏழாலை தெற்கு ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்ட காதலர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்து ஏனைய இளைஞர்களுக்குச் சிறந்ததொரு முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேற்படி இரத்த தான முகாம் காதலர் தினத்தன்று காலை 09மணி முதல் பிற்பகல் 02 மணி வரை ஏழாலை ராஜ்குமார் கடையடிக்கு அண்மையிலள்ள வர்த்தக நிலையத்தில் நடைபெற்றது.

இதில்,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரில் சென்று குருதியைப் பெற்றுக் கொண்டனர்.

இவ் இரத்த தான முகாமில் 24 ஆவது தடவையாக இரத்த தானம் வழங்கிய விளையாட்டுக்கழக அங்கத்தவரான பா.தினேஸ்குமார் (வயது-30) கருத்துத் தெரிவிக்கையில்,

நான் எனது 17 ஆவது வயதில் யூனியன் கல்லூரியிpல் யு|டு படிக்கும் போதிருந்து இரத்ததானம் வழங்கி வருகிறேன்.இரத்ததானம் தானங்களில் சிறந்த தானம் என்பதாலும், புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் இரத்தமின்றி உயிரிழக்கக் கூடாது என்பதற்காகவும் சமூக சேவை மனப்பான்மையோடு இரத்ததானம் வழங்குவதில் மன நிறைவடைகிறேன்.

இரத்தம் கொடுப்பதால் உடலுக்கு எந்தவிதத் தீங்குமில்லை. பக்க விளைவுகளுமில்லை. எனவே எந்தவொரு அச்சமுமின்றி இரத்தானம் வழங்க எம்மவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

இதன் போது 19 ஆவது தடவையாக இரத்ததானம் வழங்கிய விளையாட்டுக்கழக அங்கத்தவரான நா.ரொபின்சன்(வயது-28) கருத்துத் தெரிவிக்கையில்,

நான் ஒரு மின்சார சபை ஊழியராகக் கடமையாற்றுகிறேன். ஒவ்வொரு 04 மாதத்திற்கு ஒரு தடவையும் இரத்தானம் வழங்குகிறேன். இரத்தம் கொடுக்கும் போதெல்லாம் ஒரு உயிரைக் காப்பாற்றப் போகிறேன் என்ற எண்ணம் என்னுள் எழுகிறது. இந்த எண்ணம் எனக்குள் ஒரு வித நெகிழ்வைத் தருகிறது என்றார்.

இந் நிகழ்வில் 11 ஆவது தடவையாக இரத்த தானம் வழங்கிய ஜெ.லியோலக்சன்(வயது-22)கருத்துத் தெரிவிக்கையில்,

இரத்த தானம் செய்யும் போது எமது உடலிலிருந்து இழக்கும் இரத்தம் பின்னர் தானாகவே சுரக்கும். “நாம் வாழும் போது இன்னொரு உயிரையும் வாழ வைத்தோம்” என்ற ஒரு உணர்வு எம்முள் உருவாவதற்கு இரத்தானம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்றார்.

இம் முகாமில் முதன் முதலாகக் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய எ.சசிகரன் (வயது-17) கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கொக்குவில் இந்துக்கல்லூரியிpல் கல்வி கற்று வருகிறேன்.குடும்பத்தில் நானும் எனது அண்ணாமார்களான இருவரும் இன்றைய இரத்தான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினோம்.

எனது அண்ணாமார்களான எ.தினேஸ்காந்(வயது-20), எ.குணாளன்(வயது-18) ஆகிய மூவரும் இணைந்து இரத்தம் வழங்கினோம். எனது அண்ணாமார்கள் முன்னரும் இரத்ததானம் வழங்கியுள்ளனர். எனவே அவர்களைப் பின்பற்றி இன்றைய நல்ல நாளில் இரத்த தானம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இம் முகாமில் முதன் முதலாகக் கலந்து கொண்டு இரத்தானம் வழங்கிய இன்னொருவரான ச.ஹரிராமசங்கர்(வயது-17) கருத்துத் தெரிவிக்கையில்,

சமூக நோக்கான பார்வையில் நானாக முன்வந்து இரத்ததானம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த அனுபவம் எனக்குப் புதிதாய் அமைந்தது என்றார்.

காதலர் தினத்தன்று குறித்த இளைஞர்கள் முன்வந்து இரத்தானம் வழங்கியமை ஏனையவர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமெனப் பாராட்டியுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி ப.பிரதீபன் சுமார் 30 பேர் வரையான இளைஞர்களும், ஊர் மக்கள் சிலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை காதலர் தினத்தன்று குடாநாட்டிலுள்ள சில பிரதேச இளைஞர்கள் குடித்து விட்டுக் கும்மாளமடித்து சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்ப் பெரியவர்கள் உட்படப் பலரும் குறித்த தினத்தன்று முன்மாதிரியாகச் செயற்பட்ட குறித்த விளையாட்டுக்கழக வீரர்களை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

அநாகரிகங்களுக்கு மத்தியில் ஒரு முன் மாதிரியான செயற்பாட்டை முன்னெடுத்த குறித்த விளையாட்டுக்கழக இளைஞர்களை நாமும் மனம் திறந்து வாழ்த்துவோம்.நாளைய விடியல் நமக்கானது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் 'விஸ்வரூபம் 2'?
» காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக வந்த சிம்பு, நயன்தாரா!
» மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!
» இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்ற 147 முறை ரத்த தானம் செய்த தெய்வீக கணவர்
» பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்பதை இலங்கையின் செயற்பாடு உறுதிப்படுத்தி விட்டது – கனடா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum