TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாதுகாப்பே இல்லாத நிலையில் பார்லிமென்ட்: மூடப்பட்டது உணவகம்

Go down

பாதுகாப்பே இல்லாத நிலையில் பார்லிமென்ட்: மூடப்பட்டது உணவகம் Empty பாதுகாப்பே இல்லாத நிலையில் பார்லிமென்ட்: மூடப்பட்டது உணவகம்

Post by அருள் Sun Jul 15, 2012 7:28 am

பாதுகாப்பே இல்லாத நிலையில் பார்லிமென்ட்: மூடப்பட்டது உணவகம் Tamil_News_large_507775பார்லிமென்டில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தடுக்கும் வகையில், எந்தவொரு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்புச் சாதனங்கள் இல்லாமல்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் கட்டடத்தையே
பாழ்படுத்தும் வகையில், தாங்க முடியாத அளவுக்கு பாரங்கள்
ஏற்றப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனுமதியே இல்லாமல் இருந்த,
31 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இரவோடு இரவாக அகற்றப்பட்டு, உணவகமே
அதிரடியாக மூடப்பட்டு விட்டது.

மகாராஷ்டிர தலைமைச் செயலகமான மந்திராலயாவில், கடந்த மாதம் 21ம் தேதி,
பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச் சேதம் மட்டுமல்லாது,
ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டன. முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, டில்லியில் உள்ள
பார்லிமென்டும் உஷார் படுத்தப்பட்டது. தீ விபத்து தடுப்பு குறித்த,
முன்னெச்சரிக்கை ஆய்வுகளை மேற்கொள்ளும்படி, டில்லி தீயணைப்புத் துறைக்கும்,
சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார்.

அதிர்ச்சி: சபாநாயகரின் உத்தரவை அடுத்து, டில்லி தீயணைப்பு துறை,
உயர் அதிகாரிகள், பார்லிமென்ட் கட்டடத்தை, தங்களது ஆய்வுக்கு எடுத்துக்
கொண்டனர். ஆய்வை ஆரம்பித்த மாத்திரத்திலேயே, அதிகாரிகள் கடும் அதிர்ச்சி
அடைந்தனர். நாட்டின் ஜனநாயக கோவில் எனப்படும், மிக முக்கியமான அலுவலக
கட்டடம் இருக்கும் நிலை இதுதானா என அவர்கள் விக்கித்துப் போய் விட்டனர்.
மூன்று நாட்கள் நடத்திய, விரிவான ஆய்வுகள் மூலம், அந்தளவுக்கு பார்லிமென்ட்
கட்டடம், மிகுந்த அபாயகரமான நிலையில் இருப்பதை, அவர்கள் கண்டுபிடித்தனர்.

நிலைமை மோசம்: ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும், நம்ப முடியாத
அளவுக்கு, இந்த லட்சணத்திலா பார்லிமென்ட் கட்டடம் இயங்குகிறது என்ற பீதியை
ஏற்படுத்தக் கூடிய அளவில் உள்ளன. பார்லிமென்ட் கட்டட வளாகத்தில், எங்குமே
முறையான தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை. தவிர தீ விபத்து ஏற்படாத
வகையில், அமைப்புகள் இல்லை. தீ விபத்து ஏற்படுமாயின் அதை உடனடியாக தடுத்து
நிறுத்தக் கூடிய அளவில், தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகள் எதுவும்
இல்லை. பெரும் தீவிபத்து ஏற்படுமாயின், நிலைமையை சமாளிப்பது, மிகவும்
சிக்கலாகி விடும் என்ற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

சமையல் கூடம்: பார்லிமென்டை பொறுத்தவரை லோக்சபா, ராஜ்யசபா
மற்றும் மைய மண்டபம் ஆகியவைதான் முக்கியமானவை என்று வெளியில் பெரிதாக
தெரிந்தாலும், இன்னொன்றும் உள்ளது. அதுதான் உணவகம் மற்றும் சமையல் கூடம்.
பார்லிமென்டின் முதல் தளத்தில், சமையல் கூடம் உள்ளது. மிகவும் பரபரப்பாக
இயங்கக்கூடிய இடம் இது. விதவிதமான உணவு வகைகளை தயாரிப்பதற்கு என்றே,
ஏராளமான சமையல்காரர்களை உள்ளடக்கியுள்ள, இந்த சமையல் கூடத்தில், நிறைய
சிலிண்டர்கள் உள்ளன. ஒரே நேரத்தில் மட்டும், மொத்தம் 31 சமையல் எரிவாயு
சிலிண்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அந்தளவுக்கு பிசியாக உள்ள இடம் இது.

ஆயிரக்கணக்கானோர்: இங்கு முன் அனுமதியே இல்லாமல், ஏகப்பட்ட
சமையல் எரிவாயு சிலிண்டர்களை குவித்து வைத்து, பயன்படுத்தி வருவது, ஆய்வில்
தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், பார்லிமென்டில் அதிகாரிகள்,
பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது
நிலைமை அப்படியில்லை. பார்லிமென்டை பாதுகாப்பதற்காக நின்று கொண்டிருக்கும்
பாதுகாப்பு போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் என, ஆயிரக்கணக்கானோர்
இருக்கின்றனர்.

ஆட்கள் நடமாட்டம்: தவிர பார்லிமென்ட் அலுவலக ஊழியர்கள்,
அதிகாரிகள் என, நூற்றுக்கணக்கில் உள்ளனர். பத்திரிகையாளர்களின்
எண்ணிக்கையும் முன்பை விட பல மடங்கு உயர்ந்து விட்டது. 500க்கும் அதிகமான
பத்திரிகையாளர்கள் வந்து போகின்றனர். தவிர தினந்தோறும் நிலைக்குழு,
ஆலோசனைக் குழு கூட்டங்கள் என, எம்.பி.,க்கள் மற்றும் அதிகாரிகள் வந்து
போகின்றனர். கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில், பிரதமர், அமைச்சர்கள்,
எம்.பி.,க்கள், செயலாளர்கள், உதவியாளர்கள் டிரைவர்கள் என, கணக்கிலடங்காத
அளவுக்கு, ஆட்களின் நடமாட்டம் பார்லிமென்டில் உள்ளது.இந்த நிலைமைகளை
சமாளிக்கவே, சமையல் கூடத்தில், 31 சிலிண்டர்கள் வரை பயன்படுத்தப்படும் நிலை
உள்ளது.

சிலிண்டர்கள் அகற்றம்: டில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள்
நடத்திய ஆய்வில், முதல் வேலையாக சிலிண்டர்கள் அனைத்தையும் வெளியேற்றச்
சொல்லி விட்டனர். ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என்று கூறிய அவர்கள்,
இரவோடு, இரவாக சிலிண்டர்களை அதிரடியாக அகற்றி விட்டனர். அகற்றியதோடு
மட்டுமல்லாது, முதல் தளத்தில் எந்நேரமும் இயங்கி வந்த உணவகம் மற்றும்
சமையல் கூடத்தை மூடி "சீல்' வைத்து விட்டனர். பெரிய தீ விபத்து ஏற்பட்டால்,
யார் பொறுப்பாவது, அனுமதியில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து
சமைப்பதற்கு, யார் அதிகாரம் அளித்தது, 31 சிலிண்டர்களும் வெடித்தால்,
கட்டடமே இடிந்து, நொறுங்கி விடுமே என்ற அச்சத்தை தெரிவித்த அதிகாரிகள்,
இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பரபரப்பு: பாரம் தாங்க முடியாத அளவுக்கு கேபிள்கள், முறையற்ற
வயர்கள் என, கட்டடம் முழுவதும் சுற்றி வைத்திருப்பதையும், மூன்றாவது தளம்
முழுக்கவும் முறையற்ற வகையில் கிடப்பதையும் சுட்டிக்காட்டி, தீ விபத்து
ஏற்பட்டால், பெரும் சேதம் ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது என்றும்
கூறியுள்ளனர். பார்லிமென்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், அது இருக்கும்
பரிதாப நிலைமையும் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருப்பதால், மிகுந்த
அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இனி சுடச்சுட கிடைக்காது: பார்லிமென்டில் எம்.பி.,க்களுக்கென்றே,
பிரத்யேகமாக இரண்டு உணவகங்கள் முதல் தளத்தில் உள்ளன. முதல் தளத்திற்கு
சென்று, இந்த உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாததால்,
எம்.பி.,க்கள் பலரும், மைய மண்டபத்திலேயே உணவருந்துவர். ஆர்டர்
அளிக்கப்பட்டால், அவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைக்கே, சுடச்சுட உணவு வகைகள்
வந்து சேரும். நண்பர்கள், பத்திரிகையாளர்கள், சக எம்.பி.,க்களோடு
அளவளாவியபடியே சாப்பிடுவர். ஆனால், தற்போது பார்லிமென்ட், "கேன்டீன்'
மூடப்பட்டுள்ளதால், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடருக்காக, அடுத்த
மாதம் வரவுள்ள எம்.பி.,க்களுக்கு, சுடச்சுட உணவு கிடைக்காது. அருகில் உள்ள
பார்லிமென்ட் நூலகம் மற்றும் அனெக்ஸ் கட்டடங்களில் உள்ள உணவகத்தில்
இருந்து, பார்சல் செய்யப்பட்ட, மதிய உணவுதான் வரப்போகிறது. அவை சூடாக
இருக்குமா என்பது சந்தேகமே. பார்லிமென்ட் உணவகம் மூடப்பட்டு விட்டதால்,
உள்ளே உள்ள காபி ஹவுசில், பிரட் அல்லது சாண்ட்விச் உணவுகள் கிடைக்கின்றன.
அதற்குமே, இப்போது ஊழியர்கள் வரிசையில் காத்திருந்து சாப்பிடும் நிலை
உள்ளதால், மழைக்கால கூட்டத் தொடரில் எம்.பி.,க்கள் பாடு திண்டாட்டம்தான்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வெயிட்டரே இல்லாத உணவகம்!வீ டியோ லிங்க்!
» சீனாவில் புரட்சி பீதி: இணைய தளங்கள் மூடப்பட்டது
» உலகின் மிக பழமையான அணுமின் நிலையம் மூடப்பட்டது: அதனை சுத்தப்படுத்த 90 ஆண்டுகளுக்கு மேல் தேவை??? (Pictures)
» தேவை இல்லாமல் லஞ்சம் வாங்கி கொண்டு ஆட்களை சேர்த்ததால் அண்ணாமலை பல்கலலைகழகத்தில் நிதி நெருக்கடி காலவரையின்றி மூடப்பட்டது
» உணவகம் நகைச்சுவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum