TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மக்களே, மக்களே என்று தமிழகம் முழுவதும் வலம் வந்தும் ஏமாந்த விஜயகாந்த்

Go down

மக்களே, மக்களே என்று தமிழகம் முழுவதும் வலம் வந்தும் ஏமாந்த விஜயகாந்த் Empty மக்களே, மக்களே என்று தமிழகம் முழுவதும் வலம் வந்தும் ஏமாந்த விஜயகாந்த்

Post by அருள் Mon Oct 24, 2011 7:31 am

மக்களே, மக்களே என்று தமிழகம் முழுவதும் வலம் வந்தும் ஏமாந்த விஜயகாந்த் 23-vijayakanth-premalatha300

சிந்தியுங்கள் மக்களே,
தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் பட்டி
தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும்
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் பெருவாரியான
இடங்களில் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது.

5 மாதங்களுக்கு முன்பு இதே மக்கள்தானே 29
எம்.எல்.ஏக்களை நமக்குக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அதே மக்கள் ஏன்
நமக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் என்ற புரியாத குழப்பத்தில் தேமுதிகவினர்
உள்ளனர்.

ஆனால் மக்கள் கணக்கு வேறு மாதிரியாக இருந்துள்ளது
என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேமுதிகவை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்
கட்சியாக, நமக்கான கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே
இந்த தீர்ப்பின் முக்கிய அம்சம் என்பது இவர்களின் கருத்தாகும்.


மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க்
கெஞ்சியும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை அவர்கள்
பட்டியலிடுகிறார்கள்.

1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக
இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. இந்தக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில்
மக்களிடமிருந்து கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து அரசியலில் தான் காலூன்றவே
விஜயகாந்த் முயன்றார். ஒரு முறை கூட மக்களுக்கான கட்சியாக இதை மாற்ற அவர்
முயலவில்லை.

2.மக்களுக்கான போராட்டங்களை, மக்களின் தேவைகளுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக, சரியாக நடத்தத் தவறி விட்டது.

3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும், அதை வைத்து
கூட்டணிக்குப் பேர பேச வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாக தேமுதிக
இன்னும் கூட வைத்துள்ளது. இது மக்களிடையே எதிர்மறையான தீர்ப்புக்கு
வித்திட்டு விட்டது.

4. சீட் கேட்கவே தனது வாக்கு வங்கியை
விஜயகாந்த் முழு மூச்சாக பயன்படுத்தினார். மாறாக, திமுக, அதிமுகவுக்கு
மாற்றாக வரும், வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை அபிலாஷையை அவர்
மதிக்கத் தவறி விட்டார், மறந்து விட்டார், கவனிக்காமல் விட்டு விட்டார்.

5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், அதிமுகவின்
ஓட்டு வங்கியை மிகப் பெரிய அளவில் பந்தாடி வந்த விஜயகாந்த், கடைசியில்
அதே கட்சியுடன் போய்க் கூட்டணி வைத்தது மக்களை அதிர வைத்து விட்டது. இதை
உணர தற்போது மக்கள் விஜயகாந்த்துக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுத்துள்ளனர்.

6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான
வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே
காரணம். அதேசமயம், தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் கிடைக்க அதிமுகவுக்கு
ஓட்டுப் போட்ட மக்களின் ஆதரவு தேமுதிகவுக்கும் சாதகமாக அமைந்ததே. மற்றபடி
தேமுதிகவின் பலத்தால் வந்ததல்ல இந்த 29 இடங்களும் என்பது அரசியல்
நோக்கர்களின் ஆணித்தரமான வாதமாக உள்ளது.

7. திமுகவை விட மேலான
கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், திமுக எதிர்க்கட்சியாக கடந்த
காலங்களில் இருந்தபோது செய்ததை விட கால்வாசியைக் கூட தேமுதிக செய்யவில்லை.
குறிப்பாக சமச்சீர் கல்விப் பிரச்சினை வந்தபோது தேமுதிகவின் நிலை
மக்களுக்குக் கடைசி வரை புரியவே இல்லை.

8. இந்த ஆட்சி குறித்து
ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியதை மக்கள்
ரசிக்கவில்லை என்பதும் மக்களின் தீர்ப்பிலிருந்து புரிகிறது.
அப்படியானால் ஒரு வருடத்திற்குள் என்ன நடந்தாலும் அதை விஜயகாந்த் கண்டு
கொள்ள மாட்டார், பேச மாட்டார் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட இது
காரணமாகி விட்டது.

9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து
கொள்ளாமல், சட்டசபைக்குப் போவதும், வருவதுமாக விஜயகாந்த் உள்ளிட்ட
கட்சியினர் இருந்ததும் மக்களை சிந்திக்க வைத்து விட்டது. உண்மையில் மக்களே
சிந்தியுங்கள் என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் கூறியது மக்களை வேறு
விதமாக சிந்திக்கத் தூண்டி விட்டது.

யாருக்கும் கிடைக்காத அரிய
வாய்ப்பாக ஒரு அருமையான அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும்
மதிக்காமல், பொருட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக தேமுதிக செயல்பட்டதால்
மக்களிடையே அக்கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. மேலும்,
முக்கியப் பிரச்சினைகளில் தேமுதிகவின் கொள்கை, நிலைப்பாடு என்ன என்பதையும்
அக்கட்சியினர், மக்களுக்குப் புரிய வைப்பதில் தவறி விட்டனர்.


மொத்தத்தில் தேமுதிகவின் தற்போதைய ஒரே கொள்கை, இப்போது எதிர்க்கட்சியாகி
விட்டோம், எம்.எல்.ஏக்களைப் பெற்று விட்டோம், முரசு சின்னத்தை தக்க
வைத்துக் கொண்டு விட்டோம். அடுத்து எம்.பி பதவிகளையும் கணிசமான அளவில்
வாங்கி விடுவோம், பிறகு ஆட்சியைப் பிடிப்போம். அதுவரை அமைதியாக இருப்போம்
என்ற பாணி அரசியலை மக்களே சுத்தமாக வெறுத்து ஒதுக்கியுள்ளனர் என்பதே இந்த
தேர்தல் முடிவின் சாராம்சமாகும்.

தேர்தல் ஆணையத்திடம்
அங்கீகாரம் பெறுவது, கூட்டணி சேர்ந்து சீட்டைப் பெறுவது என்ற
விஜயகாந்த்தின் வித்தியாசமான அரசியலுக்கு மக்கள் ஆணித்தரமான
முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனது பலமே தனித்துப்
போட்டியிடுவதுதான் என்பதை விஜயகாந்த் சற்றும் புரிந்து கொள்ளவில்லை. தனது
கட்சி உயிர் பிழைப்பதற்காக அவர் கூட்டணி சேர்ந்த விதம் மக்களிடமிருந்து
அவரை அழகாக பிரித்து விட்டது. இங்குதான் ஜெயலலிதாவின் அதிமுக படு
சாதுரியமாக செயல்பட்டு பாலிட்டிக்ஸ் செய்துள்ளது. இதை அவர் புரிந்து கொள்ள 5
மாத காலம் ஆகியுள்ளது.

ஊர் ஊராகப் போய் கடுமையாக பிரசாரம்
செய்வது பெரிய விஷயமல்ல. நாம் சொல்வதை, செய்வதை தமிழகத்தின் பட்டி
தொட்டியெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நமது செயல்பாடுகள்
இருக்க வேண்டும் என்பதே அரசியலில் முக்கியம்.

தேமுதிக ஒரு
பொறுப்பான மக்கள் கட்சி, மக்கள் குரலே தேமுதிகவின் குரல்,
மக்களுக்காகத்தான் தேமுதிக என்ற நிலை மாறும்போதுதான் அந்தக் கட்சிக்கு
மக்கள் ஆதரவு நிலை பெறும், நிரந்தரமாகும், அப்போதுதான் அது உண்மையான
மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை விஜயகாந்த் உணர வேண்டும். ஆனால்
மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் மக்களே என்று சொன்ன விஜயகாந்த் பின்னர் அவரே
மாறிப் போனதன் மூலம் மற்றும் ஒரு கட்சியாகவே தற்போது தேமுதிக உருமாறிப்
போயுள்ளது துரதிர்ஷ்டவசமானதுதான்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
» ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!! மக்களே!!!
» தமிழகம் முழுவதும் 16 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்
» தமிழகம் முழுவதும் பாலச்சந்திரனுக்கு சிலை வைப்பதற்கு கோரிக்கை
» தமிழகம் முழுவதும் மீண்டும் பல மணி நேரம் மின்சாரம் "கட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum