TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொலைக்காட்சிப் பெண்ணே இது உனக்காக

3 posters

Go down

தொலைக்காட்சிப் பெண்ணே  இது உனக்காக Empty தொலைக்காட்சிப் பெண்ணே இது உனக்காக

Post by sakthy Mon Aug 01, 2011 10:03 pm

தமிழன் என்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

சிறு வயதில் அம்மாவின் திட்டுக் கேட்கும்,அரிசியிலே கல்லு,பாலிலே தண்ணீர் எதை விட்டாங்கள், இந்தப் கொள்ளைக் கூட்டம். ஆனால் அம்மா இன்றிருந்தால் கலப்படமே இல்லாதது எது என்று கேட்டிருப்பாளோ? அம்மா சொன்ன அரிசி,பால் போய்,உணவிலே,மருந்திலே,கல்வியிலே, சினிமாவிலே,தண்ணீரிலே,குழந்தைகள் பாலிலே,மருத்துவத்திலே,மனிதனிலே என்று எத்தனை எத்தனை விதமான கலப்படங்கள். நல்ல பழைய நூல்கள்,அரும் பெரும் மருத்துவ சுவடிகள் என்று, அதை தேடினால் ஓலைச்சுவடிகளில் கூட கலப்படம். போலிகள் வந்து விட்டதால், நல்லவற்றை இனம் காண முடியாமல் போய் விடுகிறது. அன்று தமிழ்த்தாத்தா கால் நடையாக ஓலைச்சுவடிகளுக்காக அலைந்து திரிந்தார். ஆனால் இன்று ஓலைச் சுவடிகளை தயாரித்து,பழையகால ஓலைச் சுவடிகள் என்று விற்பதற்கு தனித் தொழிற்சாலைகளே உள்ளன. எத்தனை அரிய கண்டுபிடிப்பு,அதிசயிக்க வைக்கிறது? கொடிய செயல்களுக்கெல்லாம் எப்படி மூளை வேலை செய்கிறது.கள்ள நோட்டு அடிப்பதற்கும்,ஓலைச்சுவடிகளை தயாரித்து பழைய கால ஓலைச்சுவடிகள் என்று விற்பனை செய்வதற்கும்,பழைய பொருட்களை,காலாவதியான பொருட்களை புதிய உருவில் வடிவமைத்து,காலாவதியாகும் திகதியை மாற்றி அமப்பது விற்பதற்கும் எப்படி திறமையாக உழைக்கிறார்கள். இந்த அரிய மூளைத்திறன் நல்ல செயல்களுக்காக மக்களுக்கு பயன்படுத்தப்படுமானால்? விஞ்ஞான முன்னேற்றம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் இவை மக்களில் ஒரு சிலருக்கு தவறான வழியில் பணத்தை தேடித் தரத் தான் பயன்படுகிறது. எங்கோ இருக்கும் சில நல்ல உள்ளங்கள் கண்ணீர் வடிக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நவநாகரீக பெண் கேலியாகவும்,குத்தலாகவும் கிராமத்து பெண்களைப் பற்றி கருத்து கூறியிருந்தாள். ' எங்கள் உடையை விமர்சிக்கிறீர்கள்,கிராமத்து பெண்கள் ரவுக்கை இல்லாமல் திரிகிறார்களே அது ஆபாச உடை இல்லையா' என்று கேட்டு கேலி செய்தாள். அப்போது என் மனதில் ஒரு உறுத்தல். யோகத்தை கொடுத்த தமிழன்,இலக்கணத்தை தந்த தமிழன்,இசையை இராகங்களை தந்த தமிழன்,நாகரீகத்தை தந்த தமிழன் உடை விஷயத்தில் கண்ணை மூடி இருந்தானா? இதற்கு விடை காண ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய ,சங்ககால இலக்கியங்களை புரட்டினேன்.படைகளில்,விவசாயத்தில்,அரசியலில்,உளவுத் துறையில், கல்வியில், மருத்துவத்தில் தலை நிமிர்ந்து நின்ற தமிழ்ப் பெண்கள் நாகரீகமாக உடை அணியாது,தொலைக்காட்சிப் பெண் சொன்னது போல் தான் இருந்தார்களா?.
பழைய இலக்கியங்களில் விடை கிடைத்தது. தங்கள் தொழிலுக்கு ஏற்ப உடைகளை தெரிந்தெடுத்தார்கள் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடத்தான்.தமிழன் என்றால் சும்மாவா,இலக்கியங்களில் சொல்லப்பட்டதும் அன்றைய தமிழ்ப் பெண்கள் உடுத்திய உடைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.உடலில் உடுத்துவது உடை,அந்த உடை இன்றைய உடைகளுக்கு இணையானதாக இருந்தது.
Bra (Brassiere) - கச்சு
Jacket --------------வடகம்
Petticoat -----------பாவாடை
surithar,Salwar Kamees ---தழை
midi ----------------வட்டுடை
mini -------சிதர்
gown -----கொய்யகம்
nighty -----இரவணி
wedding Dress -கூறை
pant ----கச்சம்
Baniyan ----குப்பாயம்
tie ------கிழி
shirt ----மெய்ப்பை
swimming dress ---புட்டகம்
இவை கம்பராமாயணம,பரிபாடல,சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை,மணிமேகலை ஆகிய நூல்களில் சொல்லப்பட்டு உள்ளன. சொல்வதற்கும்,பாவிப்பதற்கும் கடினமானதாக இருந்தாலும் இந்த உடைகளை அன்றைய தமிழ்ப் பெண்கள் உடுத்தினார்கள் என்பதை, நம்மை கேலி செய்வோர் புரிந்து கொள்ள வேண்டும்.அதே போல் ஆண்கள் மெய்ப்பை, அஞ்சுகம், படி,படம்,துண்டு,அடை போன்ற உடைகளை அவர்களின் தொழில்களுக்கு ஏற்ப அணிந்திருக்கின்றனர்.இந்த ஆடைகளை தைத்துக் கொடுப்பவருக்கு துன்னக்காரர் என அழைத்தனர்.கி.மு. 3 ளில் வடநாட்டிற்கும் கிரேக்கம், இத்தாலி நாடுகளுக்கும் மதுரையில் இருந்து மாதூரம் என்ற பெயரில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பின் பற்றும் நீங்கள் மிக உயர்ந்த உங்கள் கலாச்சார,பண்பாடுகளை மறவாதீர்கள்,This is not a dress,this is song, என்று ஜேர்மன் நாட்டு அறிஞர் ஹரல்ட்பக்பி கூறுகிறார்.
இது தவிர நம் தமிழர்கள் பிரியாணி, sea food போன்றவற்றையும் உணவாக்கிக் கொண்டனர். பிரியாணியை ஊன்சோறு என்றும்,sea food டை கடற்புலவு என்று சிலப்பதிகாரத்தில் அழைத்திருக்கின்றனர்.
டாக்டர் சிமித் என்ற ஆய்வாளர் சொல்லும் போது தமிழில் உள்ள வார்த்தைகள், மற்ற மொழி வார்த்தைகளை விட தர்க்கரீதியாகவும்,அறிவுபூர்வமாகவும் அமைந்துள்ளது என்கிறார்.மறைமலை அடிகளார் அவருடைய காலத்தில் உள்ள சொற்களை வைத்து 86,200 சொற்கள் தமிழில் உள்ளன என்றார். ஆனால் இன்றோ எத்தனை ஆயிரம் சொற்கள் அதிகமாகி இருக்கும்.இப்படி தலை நிமிர்ந்து,உலகை வழி நடத்திய தமிழன் இன்று சிங்களத்திடம் அடிமையாகி,தமிழனுக்கு என்று ஒரு நாடு கூட இல்லாமல் இருக்கிறானே,என்ன கொடுமை இது.
ஆனாலும் ஒரே ஒரு வருத்தம்,மக்கள் தொலைக்காட்சியில் மக்களிடம் நகைச்சுவையாக கேட்கப்படும் கொஞ்சம் சேட்டை,கொஞ்சம் அரட்டை என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் தமிழ் படும் பாட்டை பார்த்து, நம் தமிழ்நாட்டில் தமிழ் இந்த நிலையிலா உள்ளது என்று கண்ணீருடன் கேட்கத் தோன்றியது.பதில்கள் நகைச்சுவையானது அல்ல, பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.தமிழ் மெல்ல இனி சாகுமா,இல்லை தமிழ்நாடு மெல்ல இனி சாகுமா?
24 மணி நேரமும் இணைய வழி உலகம் சுற்றும் அக்காக்களே,அண்ணாக்களே! உங்களிடம் ஒரு கேள்வி.ஆங்கிலத்தில் உலகம் என்பதற்கு world,earth இப்படி பல சொற்கள் உண்டு.அதே போல் தமிழிலும் உலகம்,பூமி,புவி இப்படி பல சொற்கள் உண்டு. வள்ளுவன் 45 இடங்களில் உலகம் என்ற சொல்லை பாவித்திருக்கிறான். ஆங்கிலத்தில் ஐஸ், ice, என்பதற்கு எனக்கு தெரிந்தபடி ஒரு சொல் மட்டுமே, ஆனாலும் எஸ்கிமோ (Inuit)இனத்தவர் மொழியில்(Aleutisch) ஐஸ் என்பதற்கு 33 சொற்கள்(100 வரை இருப்பதாக) உண்டு. ஏன் ஒரு சொல்லுக்கு பல சொற்களை பாவிக்கிறார்கள்,ஒரு சொல் போதாதா?
-சக்தி-
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தொலைக்காட்சிப் பெண்ணே  இது உனக்காக Empty Re: தொலைக்காட்சிப் பெண்ணே இது உனக்காக

Post by abuajmal Tue Aug 02, 2011 12:22 am

அருமையான தொகுப்பு சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் clap clap clap
abuajmal
abuajmal
உதய நிலா
உதய நிலா

Posts : 24
Join date : 28/06/2011
Location : K.S.A

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

தொலைக்காட்சிப் பெண்ணே  இது உனக்காக Empty Re: தொலைக்காட்சிப் பெண்ணே இது உனக்காக

Post by piraba Tue Aug 02, 2011 7:13 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
abuajmal wrote:அருமையான தொகுப்பு சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் clap clap clap


தொலைக்காட்சிப் பெண்ணே  இது உனக்காக NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

தொலைக்காட்சிப் பெண்ணே  இது உனக்காக Empty Re: தொலைக்காட்சிப் பெண்ணே இது உனக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum