TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்…

Go down

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்… Empty யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்…

Post by அருள் Mon Mar 07, 2011 7:15 pm

நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி
வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு
சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.

ஆனால்
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி
வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து
வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா.
முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை
அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள்
நடமாட்டத்தையும் கடந்து மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்… Muthukumar3

20
நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி
வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள்
கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான்
பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை
முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது
தான் அந்த அறிவிப்பு.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

திண்டுக்கல்
மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில்
விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு
இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து
பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டைபட்டிணம், ஜெகதாப்பட்டிணம்,
மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல் , டீசல் , ரத்தம் , உணவு
, மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலைபுலிகளுக்கு
கொடுத்து வந்தார்.

1994
ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி இருந்த 80 விடுதலைப்புலிகளை
தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ
திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும்
போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள்.
இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை
பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

1995
ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க
இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு
ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொருப்பு
முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொருப்பு
சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம்
ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர்
கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளரா
இருந்தார்.

ஆனால்
சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள்
பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி
என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது. மீண்டும் போலிசிடம்
சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர்
ஏரியில் குதித்து இறந்தார்.

இதனால்
அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க
வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால்
அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப் பகை கொண்டார் அந்த சென்னை நபர்.
இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு
தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார்
முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு
பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும்
அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

1996
ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது
தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப்படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த
இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த
நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த
நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில்
சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து
வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட்
என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம்
கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த
கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.
யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்… Muthukumaar1

அந்த
குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர்
நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த
இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது.
இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி,
மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி
தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை
வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி
கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள்
சார்ந்திருந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால்
முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து செயல்பட்ட போது
அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது.
முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார். இளவரசன் குரூப்பில் இருந்த
வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார்
சிறையில் இருந்தார்.

ஆனால்
அறிவழகனை போட மூலையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப்
நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது
இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர்
நபர் ஆகியோரும் இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க
தொடங்கினார்கள்.

1999
முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில்
மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல்
உருவாகி பெரிய சண்டை நடந்தது.

தலித்
கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி
முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு
மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில்
இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த
கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா?
என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில்
சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து
ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட்
கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன்
அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான்
கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த
நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த
வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது
வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர்.
இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து
செயல்பட்டு வந்தது.

இந்த
நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ்
எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு
தீவிரமாக கட்சி பணி செய்தார். சுப. இளவரசன் குரூப்பில் இருந்து
முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய
பொருப்புக்கு வந்தனர். பொருப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன் தான்
பார்த்தனர்.

போன
மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி
பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின்
மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில்
முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.
யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்… Muthuku-maar2
முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார்
கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன்
முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து
கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான்
கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த
துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த
சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ
இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு
காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

துண்டுபிரசுரம்
வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக
புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க
நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான்,
சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே
சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று
முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று
சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட
முத்துகுமாரிடம் மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

இந்த
நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள்
கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள்
கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

மேலே
நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று
அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின் டீம் தான்
போட வந்தது என்பது தெரியவருகிறது.

இந்த
நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை
சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

முத்துக்குமாரின்
கூட இருந்த தோழர்கள் இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக
எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க
தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின்
பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ்கண்ணுல மண்ணை தூவிட்டு தான்
இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர்
விடுதலைப்படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார்.
எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே
வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட
போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும்
முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப
தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில்
இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார்.

இப்ப
நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை
கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு
தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம்
வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து
கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும்
முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த
நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து
மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல
புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க
வில்லை தான்.

பெட்டி செய்தி:

ஒரு
மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு
கொல்லப்பட்ட மறுநாள் இறங்கல் கூட்டத்தில் முத்துக்குமார்
பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில்
படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

ஆனால்
அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு
ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த
கருப்பு உருவத்தை பார்த்து கேட்க நான் ஐ.பி சென்னை.

முத்துக்குமாரை
சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி
தானா? என்பது தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே
கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

செம்பருத்தி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum