TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:40 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 30, 2023 6:16 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am


இணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும்

Go down

இணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும் Empty இணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும்

Post by Tamil Thu Apr 21, 2016 2:05 pm

இணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும்
வர்த்தகம்
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் போட்டி தொடந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் கவனத்தையும் கூடுதலாக ஈர்த்டு வருகிறது. பிரம்மிக்கத்தக்க வகையில் வளர்ச்சி இருக்கும் என்ற உறுதியைத் தருகிறது. இதன் தன்மையை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நூறு சதவீதம் முதலீடு செய்திடலாம் என்ற அரசின் புதிய கொள்கை அறிவிப்பு, இந்த வர்த்தகப் பிரிவின் தன்மையை மாற்ற இருக்கிறது. இது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
வர்த்தக வாய்ப்புகள்:

இந்தியாவின் 125 கோடி ஜனத்தொகையில், மொபைல் போன்களை முதன் முதலாகப் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலத்தினை ஒரு பொது மொழியாகப் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர். அத்துடன், வேகமாக உயர்ந்து வரும் மத்திய தர வர்க்க மக்களும் இவர்களுடன் இதே வகையில் இணைகின்றனர். இதனால், இணைய வழி வர்த்தகத்தில் இந்தியாவில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களின் கவனத்தினை ஈர்த்துள்ளன.
அண்மையில், இந்திய அரசு Department of Industrial Policy and Promotion என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கொள்கை முடிவு, வெளிநாட்டு நிறுவனங்கள், இணைய வழி வர்த்தகத்தில் 100 சதவீத முதலீட்டினை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதன் மூலம், இணைய வழி வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும், வழக்கமான முறையில், பொருட்களைக் கொள்முதல் செய்து வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும் புதிய பலன்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால், அரசு ஒரு விஷயத்தில் உறுதியாய் உள்ளது. இந்த புதிய கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் இணைய வழி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், அவற்றை வாங்குபவர்களுக்கும் இடையே தொழில் நுட்ப கட்டமைப்பினை ஏற்படுத்தி, வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாகும். பொருட்களைத் தன் முதலீட்டுப் பணத்தில் வாங்கி வைத்துக் கொண்டு, இணையம் வழி விற்பனை செய்திடும் வர்த்தக அமைப்பாக இவை இயங்கக் கூடாது. (இந்த விதி, ஆப்பிள் போன்ற நிறுவனத்திற்குத் தடையாக இருக்கும். ஏனென்றால், ஆப்பிள் தன் விற்பனை நிலையங்கள் வழியாக மட்டுமே, தன் பொருட்களை விற்பனை செய்திடும். மற்ற நிறுவனங்களின் கடைகள் வழியாகச் செல்வதனை விரும்பாது.) இந்த விதிமுறை மூலம், பொருட்களைத் தயாரிப்பவர்கள், இணையம் வழி மொத்த மற்றும் சில்லரை வர்த்தகத்தில் எந்த அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. இது சில்லரை வர்த்தகர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

[You must be registered and logged in to see this image.]
இந்தப் புதிய கொள்கை அறிவிப்பிற்கு முன்னரும், இந்தியாவில் புதிய முறை வர்த்தகத்திற்கான சந்தர்ப்பங்கள் உருவாகிப் பலரும் பயன் பெற்று வந்தனர். இந்திய அளவில், வர்த்தக வளாகங்கள் (mall based stores) தொடர் விற்பனை மையங்கள், நிறுவனத்தின் தனி விற்பனை மையம் எனப் பல வகைகளில் வர்த்தக நடைமுறைகள் பெருகின. இவற்றின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 15% முதல் 20% வரை பெருகி வந்தது. இருப்பினும் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் குறைவாகவே (8%) இருந்தது.
இதற்கிடையே, இந்திய இணையம் மற்றும் மொபைல் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 5.2 கோடி புதிய இணையப் பயனாளர்கள் செயல்படத் தொடங்கியதாக அறிவித்தது. அப்போது மொத்தம் 35.2 கோடி பேர் இணையம் பயன்படுத்தினர். இவர்களில் 60% க்கும் மேலாக, 21.3 கோடி பேர் இணையத்தைத் தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாக அணுகினர். இந்த எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட்டால், ஒவ்வொரு 3 விநாடி காலத்திலும், இந்தியாவில் வாழும் ஒருவர் தங்கள் மொபைல் வழியாக இணைய அனுபவம் பெற்றிருப்பது தெரியவரும்.
இந்த இணைய மக்களால், சில்லரை வர்த்தகமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மொத்த சில்லரை வர்த்தகத்தில், இது 4% முதல் 6% வரையே என்றாலும், இதன் வளர்ச்சி அதிக வேகத்தைக் கொண்டுள்ளதை அனைவரும் கணித்துள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இணைய உலாவில், 62% தேடல்களில், 25 சில்லரை வர்த்தக இணைய தளங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மொத்த இந்திய இணையப் பயனாளர்களில், 12% பேர் இணையதளங்கள் வழியாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இது அடுத்த ஆண்டு, 20% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்ற ஆண்டு, 60 கோடி டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இணைய வர்த்தகம், 2020 ஆம் ஆண்டில், இரு மடங்காக உயரும் என்று அனைவரும் கணித்துள்ளனர்.
இந்தியாவில், இணைய வர்த்தகத்தில், சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ப்ளிப்கார்ட், முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதன் தற்போதைய விற்பனை ஆயிரம் கோடி டாலர் மதிப்பளவில் உள்ளது. பத்தாண்டுகளாக இயங்கும் இந்நிறுவனத்தில், பதிந்து வைத்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4.6 கோடி. இதன் ஊழியர்கள் 33 ஆயிரம். ஒவ்வொரு நாளும், இதன் தளத்தை ஒரு கோடி பேர் பார்த்து வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு, அமேஸான் இந்தியா நிறுவனம் தோன்றியபோது, ப்ளிப்கார்ட் நிலை சற்று தடுமாறியது. மிகப் பெரிய அளவில் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ள அமேஸான் தன் விற்பனை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்க்கும் ஸ்நாப்டீல், அனைத்து வகை பொருட்களையும் விற்பனை செய்திடும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இதனிடத்தில் பதிந்துள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டியுள்ளது.
சீனாவில் இயங்கும் சில்லரை இணைய வர்த்தக நிறுவனமான, அலிபாபா, இந்தியாவில் தன் வர்த்தகத்தினைத் தொடங்கி, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து முன்னணி நிறுவனமாக வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவை தவிர, பல மாநிலங்களில், சிறிய அளவில், இணைய தளம் வழியாக சில்லரை வர்த்தகத்தினைப் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
சவால்கள்: இந்தியாவில் இணைய வர்த்தகத்திற்கு இமாலய வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது உண்மையே. ஆனால், அது மிக எளிதாக எட்டக் கூடியதாக இல்லை என்பதே இன்றைய நிலையாக உள்ளது. புதிய வர்த்தக சோதனை முயற்சிகளில் முதலீடு செய்திடும் நிறுவனங்கள், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் நிதி முதலீடு செய்திடத் தயங்குகின்றன.
அடுத்தபடியாக, ஓர் இணைய வர்த்தகத்திற்குத் தேவையானக் கட்டமைப்பு இந்த நிறுவனங் களிடம் இல்லை. குறிப்பாக, சரக்குகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய வழிமுறைகளை இந்த நிறுவனங்கள் சரியாக வழிமுறைகளை அமைக்கவில்லை.
இணைய வர்த்தக நிறுவனங்களிடம் பதிவு செய்திடும் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் வழங்கிடும் பொருட்களின் தரம் குறித்து வரையறை செய்திடும் விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை.
அடுத்ததாக, அரசு குறிப்பிட்ட அளவிற்கு மேல், விலைக் கழிவினைத் தரக் கூடாது என வரையறை செய்துள்ளது. பொதுவாகவே, இந்த இணைய வர்த்தக நிறுவனங்கள், அதிரடியாக டிஸ்கவுண்ட் அறிவித்து, தங்களை வர்த்தகத்தினைப் பெருக்கிக் கொள்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பு இவற்றின் உற்சாகத்தைத் தடை செய்வதாக உள்ளது.
இருப்பினும் இந்த தடைகளை எல்லாம் சரி செய்து, வர்த்தகத்தினைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டுதான் உள்ளன இந்த இணைய தள வர்த்தக நிறுவனங்கள். வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில், அரசும் இந்நிறுவனங்களும் செயல்படத் தொடங்கினால், இணைய வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கோல்கட்டாவில் இருந்து வந்த பனியன் தொழிலில் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சி காரணமாக, திருப்பூரை "டாலர் சிட்டி' என்றுஅழைக்கும் வகையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி வர்த்தகம் நடக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்,
» உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !
» இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..
» வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா
» பங்கு வர்த்தகம் சரிந்ததால் வங்கதேசத்தில் திடீர் கலவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum