TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா!

2 posters

Go down

''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா! Empty ''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா!

Post by Tamil Tue Jul 08, 2014 7:23 am

''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா! P36a
''பரத், ஆட்டிஸ குழந்தைனு தெரிய வந்தப்போ, 'ஆட்டிஸம்'னா என்னனுகூட எனக்குத் தெரியாது. ஆனா, அதுக்கு அப்புறம் அதைப்பத்தி எனக்குத் தெரியாதது எதுவும் இல்லைங்கிற அளவுக்கு, எல்லாத்தையும் தேடித்தேடி தெரிஞ்சுக்கிட்டேன். இன்னிக்கு பரத், டிகிரி முடிச்சி, வேலைக்குப் போயிட்டிருக்கான். கூடவே, கீ-போர்ட் வாசிக்கிறது, டூ வீலர் ஓட்டுறதுனு கலக்கறான். நார்மலான குழந்தைகளுக்கு இணையா அவனையும் ஆளாக்கிட்டேன். ஒரு தாயா, ரொம்ப திருப்தியா உணர்றேன்!''
- கோவையைச் சேர்ந்த சித்ரா சுப்ரமணியனின் ஒவ்வொரு வார்த்தையிலும் போராட்ட அன்பு!
ஆட்டிஸத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு இப்போதுதான் ஓரளவுக்கு பரவி வருகிறது. இந்நிலையில், 20 வருடங்களுக்கு முன் ஆட்டிஸம் பாதிப்பில் சிக்கிய தன் பிள்ளையை, தளராத நம்பிக்கையோடு வளர்த்தெடுத்திருக்கும் சித்ராவின் தாய்மை, இதோ அவருடைய வார்த்தைகளிலேயே...
''கணவர், ஆடிட்டரா இருக்கார். நான் பொறியியல் பட்டதாரி. பரத், குழந்தையா இருக்கறப்போ யாரையும் தூக்கவிட மாட்டான். ரொம்ப அழுவான். ஆறு மாச குழந்தையா இருந்தவனை, உறவினர் கல்யாணத்துக்கு தூக்கிட்டுப் போனப்போ, கூட்டத்தைப் பார்த்ததும் சமாதானம் பண்ண முடியாத அளவுக்கு அழுதுட்டான். வீட்டை விட்டு எங்க தூக்கிட்டுப் போனாலும் அழுதுடுவான். ஒரு வருஷமாகியும் உட்காரவே இல்ல. ஆனா, இதெல்லாம் ஒரு குறைபாடா அப்ப எனக்குத் தெரியல.

ப்ளே ஸ்கூலில் சேர்த்துவிட்டப்போ, மத்த பசங்களோட சேராம தனிச்சு இருந்தான். ஏதாவது ஒண்ணை மட்டும் தொடர்ச்சியா பார்த்துட்டே இருந்தான். யாரையும் கண்ணைப் பார்த்துப் பேச மாட்டான். அந்த ஸ்கூல்லதான், 'உங்க பையனுக்கு ஏதோ பாதிப்பு இருக்கும்போல தெரியுது. எதுக்கும் ஆட்டிஸம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க’னு சொன்னாங்க. இதைக் கேட்டதுமே அதிர்ந்திட்டேன். அந்த வார்த்தையை முதல்முதலா அப்பதான் கேட்டேன். அதைப் பத்தி எதுவுமே தெரியாதிருந்த நான், நிறைய புத்தகங்கள் படிச்சு, அதைப் பற்றி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டேன். அவனுக்கு அந்த பாதிப்பு இருக்கறதையும் உறுதிபடுத்திக்கிட்டேன். எங்களோட குடும்ப நண்பர், 'சிறப்புக் குழந்தைகளுக்கான எங்களோட பள்ளியில் சேர்த்து விடுங்க. அப்போதான் அவனோட வளர்ச்சியை கொஞ்சமாவது சரிபண்ணிக்க முடியும்'னு சொன்னார்...''
- சித்ரா எடுத்த முடிவென்ன?
''என் குழந்தையை நார்மலாக்கிடலாம்ங்கிற நம்பிக்கையும், ஆசையும் எனக்கு நிறைய இருந்துச்சி. அதனால நார்மல் ஸ்கூல்லயே சேர்த்தேன். அஞ்சாவது வரை வித்யா நிகேதன் ஸ்கூல்ல படிச்சான். பள்ளியில அதிக அக்கறை எடுத்துக்கிட்டாங்க. நானும் புதுப்புது முயற்சிகள் மூலமா, படிப்பைக் கத்துக்கொடுத்தேன். நிறைய சக்கரம் இருக்கற வாகனங்கள் மேல அவனுக்கு இஷ்டம். குறிப்பா, ரயில். அதனால ரயில் பொம்மைகளை வெச்சே... 'கோச் 1’, 'கோச் 2’னு எண்களை சொல்லிக்கொடுத்தேன். ஆட்டிஸ குழந்தைகள் புத்தகத்தில் உள்ளதைப் படிச்சாலும், பொதுவாழ்க்கையில ஒப்பிட்டுப் பார்க்கும் திறன் இருக்காது. அதனால உயிரியல் பூங்காவுக்குக் கூட்டிட்டுப் போய், விலங்குகளை எல்லாம் நேரடியா காட்டி சொல்லிக்கொடுத்தேன். வெளியில கூட்டிட்டுப் போய்... அங்கங்க பேசுற மொழி, சுவரில் எழுதியிருக்கும் வார்த்தைகள், பேருந்தில் உள்ள எண்கள்னு படிக்க வெச்சேன்.
அஞ்சு வயசா இருக்கறப்போ, அவனுக்கு தம்பி (வசிஷ்ட்) பிறந்தான். அப்பதான் அவனோட தனிமை கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சிது. சகஜமா பழக ஆரம்பிச்சான். பள்ளிக்கூடத்துலயும் மத்தவங்ககூட பழகறதுல முன்னேற்றம். தம்பி பேச ஆரம்பிச்சப்போ, அவனோட சேர்ந்து பரத்தும் பேச ஆரம்பிச்சான். அப்ப அவனுக்கு வயசு ஏழு. அஞ்சாவது முடிச்சதும், 'விவேக் ஆலயா’ ஸ்கூல்ல சேர்த்தோம். ரீடிங் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி படிக்க வெச்சோம்.
ரொம்ப மெதுவாதான் எழுதுவான். பரீட்சையில் பதில் தெரிந்திருந்தாலும், எழுத நேரம் பத்தாது. அதனால எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத முடியாது. பத்தாவது படிச்சப்போ, அவனோட பிராக்டிகல் எக்ஸாம்ஸுக்கு தேவையான கருவிகளை எல்லாம் வீட்டில் வாங்கி வெச்சி, அவனுக்கு பயிற்சி கொடுத்தேன். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 71 பர்சன்ட் மார்க் வாங்கி, எங்கள ஆனந்தக் கண்ணீரில் நனைச்சிட்டான். ப்ளஸ் ஒன் படிக்க ஏ.எல்.ஜி ஸ்கூல்ல பிசினஸ் மேத்ஸ் குரூப்பில் சேர்த்தேன். அவனும் நானும் வழக்கம் போல் கடுமையா, தொடர்ந்து உழைக்க... ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டான்!''
- அந்தத் தாய், தன் சேயின் கைபிடித்து அழைத்து வந்த கல்விப் பயணம், அன்பின் ஆழம்.
''சங்கரா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல பி.காம் சேர்ந்தான். வெளியுலகப் பழக்கமெல்லாம் அங்க கத்துக்கிட்டான். காலேஜுக்குத் தினமும் பஸ்ல கூட்டிட்டுப் போய், அவனையே டிக்கெட் எடுக்கச் சொல்லிப் பழக்கி, ஸ்டாப்பில் இறங்கச் சொல்லிக் கொடுத்து, காலேஜுல விட்டுட்டு வீட்டுக்கு வந்துடுவேன். திரும்ப, காலேஜ் விடுற நேரத்துக்கு போய் கூட்டிட்டு வருவேன். ஆரம்பத்துல ரெண்டு வேளையும் போவேன், அப்புறம் ஒரு வேளை மட்டும் போயிட்டு வந்தேன்.
சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடைக்கு சைக்கிள்ல அனுப்பிப் பழக்கினேன். ஒரு கட்டத்துல, டூ வீலர் ஓட்டணும்னு கேட்டான். அதன்படியே வாங்கிக் கொடுத்து, காலேஜுக்குப் போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்ட பரத், சாலை விதிகளை பெர்ஃபெக்ட்டா ஃபாலோ பண்ணி, நல்லா வண்டி ஓட்டுறான். நல்லா கீ-போர்டு வாசிப்பான். வீட்டில் யாருக்காவது பிறந்தநாள்னா, அவனோட இசை வாழ்த்தில்லாம இருக்காது. இப்போவெல்லாம் அவனுக்கு ஏதாவது தேவைப்பட்டா, 'நீ ரெஸ்ட் எடும்மா!’னு அவனே நெட்டில் தேடிக்கிறான்!
என் பையனை ஆளாக்கின இந்த முயற்சியில், என் கணவரின் அன்பும் அக்கறையும் அதிகம். சாஃப்ட்வேர், புத்தகங்கள்னு அவனுக்காக தேடித்தேடி வாங்கிட்டு வருவார். இவனுக்கே பெரும்பான்மையான நேரத்தை நான் செலவிட வேண்டி இருக்கறதால, சின்னவனை அவர் பொறுப்பெடுத்துக்கிட்டார்'' என்ற சித்ரா,  
''கம்ப்யூட்டரில் ஆர்வமா இருக்கிற பரத், இப்ப கணவரோட நண்பர் கம்பெனியில டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா வேலை பார்க்கிறான். 'பரத், ஆட்டிஸ குழந்தையாமே..?’னு அப்போ கேட்டவங்களுக்கும், வெளிப்படையா கேட்கலைனாலும் எங்களை வேடிக்கையா பார்த்தவங்களுக்கும் இப்போ பதில் சொல்லத் தோணுது. என் பிள்ளை யையும் மத்த பிள்ளைகள் மாதிரியே படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பிட்டேன். தன் சம்பளத்துல எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அழவெச்சுட்டான் என் பையன்'' என்றபோது, தன் அம்மாவை அன்புடன், நன்றியுடன் கட்டியணைத்து, அதுவரை பேசாத அத்தனை வார்த்தைகளையும் அந்த ஒரு நொடியில் புரியவைத்தார் பரத்.
''ஆட்டிஸ குழந்தைகள் பிறக்கிறது, யாரோட தப்பும், சாபமும் இல்ல. அவங்களை அன்போட, அக்கறையோட, அர்ப்பணிப்போட வளர்த்தா... நிச்சயம் மத்த குழந்தைகள் மாதிரி நல்ல நிலைக்கு வருவாங்க!''
- நம்பிக்கை கொடுக்கிறார் இந்த அன்பு அம்மா!
ஆட்டிஸம்...
மரபுரீதியாகவோ அல்லது கர்ப்பகாலத்தில் அம்மாவுக்கு ஏற்படும் மனஉளைச்சல்கள் காரணமாகவோ... பிறக்கும் குழந்தைகளில் சிலர், ஆட்டிஸ பாதிப்புகளோடு பிறக்கிறார்கள். தேவைக்கு மட்டும் ஈடுபாடு காட்டும் குழந்தைகளாகவும், அதிக துறுதுறுப்பு, கவன சிதறல்களோடு இவர்கள் காணப்படுவார்கள்.
-அவள் விகடனிலிருந்து...
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா! Empty Re: ''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா!

Post by அருள் Wed Jul 09, 2014 7:40 am

வாழ்த்துக்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா!
» கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் எழுந்து வீட்டு வேலைகள் செய்வதே சிரமமாக இருக்கும். இதில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் என்றால் கூடுதல் சுமைதான். வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. கர்ப்பகாலத்தில
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!uf
» இப்ப முடியுமா? (1920 களில் )
» வேலைக்குப் போகும் பெண்களின் பல்வேறு திறமைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum