TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


என்கவுன்டர் எழுப்பும் கேள்விகள்

Go down

என்கவுன்டர் எழுப்பும் கேள்விகள் Empty என்கவுன்டர் எழுப்பும் கேள்விகள்

Post by ஜனனி Tue Mar 13, 2012 10:41 pm

என்கவுன்டர் எழுப்பும் கேள்விகள்

ஆ.பழனியப்பன்


சென்னையில் 5 இளைஞர்கள் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது


ரு
வாரங்களுக்கு முந்தைய வியாழக்கிழமை (பிப்ரவரி 23), நள்ளிரவில் சென்னையின்
புறநகர்ப் பகுதியான வேளச்சேரியில் 5 இளைஞர்கள் சென்னை போலீசாரால்
என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை மட்டுமல்ல, பல கேள்விகளையும்
எழுப்பியுள்ளது.



பொதுவாக என்கவுன்டர் என்பது, ஊரறிந்த சமூக விரோதிகளுக்கும் காவல்துறைக்கும்
நடக்கும் தெருச் சண்டையிலோ அல்லது காவல்துறையினரிடமிருந்து தப்பிச்
செல்ல முயலும்போதோ நடக்கும். ஆனால், இம்முறை வீட்டிற்குள்ளிருந்த 5 பேர்
சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது.






கேள்வி - 1

ஏன் உயிருடன் பிடிக்க முயற்சிக்கவில்லை?


இரவு நேரத்தில், ஒதுக்குப்புறமாக இல்லாத நகரின் பகுதியில், அடுக்குமாடிக்
குடியிருப்பில் ஒரு சிங்கிள் பெட் ரூம் அறைக்குள் இருந்த 5 இளைஞர்களை,
அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமான, பயிற்சி பெற்ற காவலர்களால் உயிரோடு
பிடித்திருக்க முடியாதா?



"அவர்களை உயிருடன் பிடித்திருந்தால், போலீசுக்குத்தான் நிறைய லாபமாக
இருந்திருக்கும்" என்கிறார், மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ்.
அதற்கான காரணத்தையும் அவர் கூறுகிறார்:



"சமீபகாலமாக மகாராஷ்டிராவில் நிறைய வங்கிக் கொள்ளைகள் நடைபெற்றன. அதில்
தொடர்புடைய சுபோத் கான் சிங் என்ற இளைஞர், மகாராஷ்டிரா போலீசாரிடம்
வாக்குமூலம் அளித்துள்ளார். ‘பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்தான்
வங்கிகளில் கொள்ளை அடிக்கிறது என்றும், அடுத்ததாக தமிழ்நாட்டிலும் கொள்ளை
அடிக்கப்போகிறோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘திங்கள்கிழமைதான் கொள்ளை
அடிப்போம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் கொள்ளை அடிப்போம்,
சி.சி.டி.வி. கேமரா இல்லாத வங்கிகளில்தான்கொள்ளை அடிப்போம், பொம்மைத்
துப்பாக்கிதான் பயன்படுத்துவோம்’ என்று, தாங்கள் கொள்ளை அடிக்கும் முறை
குறித்து போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். அந்தத் தகவல்கள்தான்,
வேளச்சேரியில் தங்கியிருந்த 5 பேரை எளிதாகக் கண்டுபிடிக்க சென்னை
போலீசாருக்கு உதவியது. அந்த நபரை மகாராஷ்டிரா போலீஸ், என்கவுன்டரில்
சுட்டுக் கொன்றிருந்தால் அந்தத் தகவல்கள் சென்னை போலீசுக்கு
கிடைத்திருக்காது. எனவே, அந்த 5 பேரையும் உயிருடன் பிடித்திருந்தால்
,சென்னை போலீசுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கும்" என்கிறார்
அ.மார்க்ஸ்.



"அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியிருக்கலாம்
அல்லது வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீர் பீச்சி அடித்திருக்கலாம். அதுகூட
வேண்டாம். நான்கு நாட்களுக்கு அவர்கள் வெளியே வர முடியாமல் பட்டினி
போட்டிருந்தால்கூட, மிக எளிதாகப் பிடித்திருக்க முடியும்" என்கிறார்,
மக்கள் சிவில்உரிமைக்கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர்
வி.சுரேஷ்.


ஆனால், ஏன் அவர்களை உயிருடன் பிடிக்கவில்லை என்பது குறித்து காவல்துறை அளிக்கும் விளக்கம் மழுப்பலாகவே இருக்கிறது.



‘அவர்கள் 5 பேரும் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான்
எங்களுக்கும் உதவியாக இருந்திருக்கும். அவர்கள் சம்பந்தப்பட்டுள்ள பிற
சம்பவங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் அது உதவியிருக்கும். தேசிய அளவிலான
நெட்வொர்க் அவர்களுக்கு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க
உதவியிருக்கும். ஆனால், எங்கே நிறுத்துவது, எப்போது நிறுத்துவது என்பது
சற்று சிக்கலான கேள்விதான்’ என்று, ‘இந்து’ நாளிதழ் பேட்டியில்
தெரிவித்திருக்கிறார் திரிபாதி.


கேள்வி - 2

சம்பவம் எங்கு நடந்தது ?


‘என்கவுன்டர் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள், சம்பவம் எங்கு
நடந்தது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனெனில், அந்த வீட்டின் கதவை
உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர் என்று ஆணையர் திரிபாதி
கூறுகிறார். ஆனால், அந்த வீட்டின் கதவு உடைந்தோ அல்லது சேதமடைந்தோ
காணப்படவில்லை’ எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.



‘அவர்கள் எங்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எங்களைப் பார்த்ததும்
கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்கள். அதனால், நாங்கள் திருப்பிச் சுட
வேண்டியதாயிற்று’ என்கிறார் திரிபாதி. ‘இந்தச் சண்டை, ஜன்னலுக்கு அருகில்
இருந்த சுவரில் இருந்துதான் ஆரம்பமானது’ என்று போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், அந்தச் சுவரில் இரண்டு இடங்களில் மட்டுமே தோட்டாக்களின் குறி
இருந்தது. அவை இரண்டும் ஒரே உயரத்தில் காணப்பட்டன. சண்டை நடந்த இடத்தில்
இருந்த தொலைக்காட்சிப் பெட்டி சேதமடையவில்லை. ஜன்னல் கம்பியிலும்கூட
தோட்டாக்கள் பட்டதற்கான குறி எதுவும் இல்லை. துப்பாக்கி சுடுவதில் மிகத்
தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால்தான் ஜன்னல் கம்பிகளில் உரசாமல்,
கம்பிகளுக்கிடையில் உள்ள சிறு இடைவெளி வழியே துப்பாக்கி குண்டு செல்லுமாறு
சுட முடியும். காவல்துறையினர் அந்த அளவிற்குப் பயிற்சி பெற்றவர்களாக
இருந்திருக்கலாம். ஆனால் கொள்ளையர்கள்?


சம்பவம் நடந்த இடத்தில் தரையில் ரத்தம் தேங்கிக் கிடந்தது. ஆனால், சுவரில் ரத்தக் கறை ஏதும் இல்லை.



மறுநாள் மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை
மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி, போலீசார் எத்தனை ரவுண்டுகள் சுட்டனர்,
எதிராளிகள் எத்தனை ரவுண்டுகள் சுட்டனர் என்பதைத் தெரிவிக்க
மறுத்துவிட்டார். காவல்துறை ஆய்வாளர்கள் 2 பேர் காயமடைந்ததாகவும்,
ஒருவருக்கு அடிவயிறு மற்றும் தலையிலும் காயம் ஏற்பட்டதாகவும்,
இன்னொருவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் ஆணையர் தெரிவித்தார்.
அதேசமயம், கொல்லப்பட்ட 5 பேருக்கும் கழுத்து மற்றும் தலையில் காயங்கள்
இருப்பது தெரிந்தது. இரண்டு பேருக்கு நெற்றிப்பொட்டில் தோட்டாக்கள்
துளைத்திருந்தன.



எதிர்வீட்டில் வசிக்கும் யசோதா நாகப்பன் என்பவர், ‘இரவு 10 மணிக்கு
போலீஸ் படை வந்தது. உடனே அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்களை அடைத்து,
விளக்குகளையும் அணைத்துவிட்டனர். வீட்டிற்குள் இருந்து அவர்களை வெளியே
கொண்டுவருவதற்கு போலீசார் இரண்டு மணி நேரம் முயற்சித்தனர். அதன் பிறகு என்ன
நடந்தது என்று தெரியாது. எங்களை வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று
சொல்லிவிட்டார்கள். கொஞ்சநேரம் ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு பிறகு,
அறைக்குள் போய்விட்டோம்’ என்கிறார். ‘சில நிமிடங்களுக்குப் பிறகு பலத்த
சத்தம் கேட்டது’ என்று, ‘இந்து’ நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.



‘வழக்கத்திற்கு மாறான சத்தம் எதையும் நாங்கள் கேட்கவில்லை. இரவு 11.30
மணியளவில் ஏராளமான போலீசார் இருந்ததைப் பார்த்தோம். பயத்தில் வீட்டின் கதவை
பூட்டிக்கொண்டோம். காலை 4 மணிக்கு கதவைத் திறந்தேன். அப்போதுதான்
என்கவுன்டர் சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன்’ என்று, ‘டைம்ஸ் ஆஃப்
இந்தியா’வில் கூறுகிறார், சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு அருகில் வசிக்கும்
உதயசூரியன் என்பவர்.



எதிர்வீட்டில் வசிக்கும் யசோதா, ‘சத்தம் கேட்டது’ என்கிறார். ஆனால்,
பக்கத்து வீட்டில் வசிக்கும் உதயசூரியன், ‘சத்தம் எதுவும் கேட்கவில்லை’
என்கிறார்.



சம்பவ இடத்திற்கு நள்ளிரவு 12.30 மணிக்கு போலீஸ் படை வந்ததாக போலீசார்
கூறுகின்றனர். ஆனால், இரவு 9 மணியில் இருந்தே அப்பகுதியில் போலீசாரின்
நடமாட்டம் இருந்ததாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்


இவையெல்லாம் என்கவுன்டர், வேளச்சேரி அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான் நடந்ததா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.


கேள்வி - 3

எதற்காக இந்த என்கவுன்டர்?


இரண்டு வங்கிக் கொள்ளைகள் மட்டுமல்ல, அண்மைக்காலமாக தலைநகர் சென்னை உட்பட
தமிழகம் முழுவதும் ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக
நடைபெறுகின்றன. கீழ்கட்டளையில் வங்கிக்கொள்ளை நடந்த நாளில்தான்
திருப்பூரில் பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.



‘கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’
என்று, என்கவுன்டர் சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகத்தான்
முதல்வர் பேசியிருந்தார்.



தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்களின்
மதிப்பையும், நம்பிக்கையையும் காவல்துறை இழந்து வருவதிலிருந்து கவனத்தைத்
திசை திருப்பும் முயற்சியா இந்த என்கவுன்டர் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


கேள்வி-4

சந்தேகத்தின் பேரில் கொல்லலாமா?


காவல்துறை அந்த வேளச்சேரி குடியிருப்பிற்குச் சென்றபோது அதன் கையில்
இருந்த தகவல், வங்கிக் கொள்ளைச் சம்பவம் பற்றிய சி.சி.டி.வி. படத்தில்
காணப்படும் ஒருவர் அந்த வீட்டில் தங்கியிருக்கிறார் என்பதுதான். அவரை
சந்தேகத்தின் பேரில் விசாரிக்கலாம் என்றுதான் சென்றதாக காவல்துறையினர்
சொல்கின்றனர். ஆனால், இதுவும் பல கேள்விகளை எழுப்புகிறது. வெறும்
விசாரணைக்குச் செல்பவர்கள் துப்பாக்கியும் கையுமாகச் செல்வார்களா? இத்தனை
போலீசார் செல்வார்களா? இதைப் போன்ற ஓர் அகால வேளையில் செல்வார்களா? உள்ளே
இருந்தவர்களில், போலீசார் சுட்ட நேரத்தில் ஒருவர்தான் குற்றம் புரிந்ததான
சந்தேகத்திற்குள்ளானவர். அப்படியிருக்க, எதற்காக 5 பேரையும் சுட்டுக்
கொன்றார்கள்? 5 பேரும் குற்றம் செய்தவர்கள் எனக் காவல்துறைக்கு எப்படித்
தெரியும்? வேறு நகரங்களிலிருந்து, குறிப்பாக வேறு மாநிலங்களிலிருந்து
சென்னைக்கு வந்து வீடு எடுத்துத் தங்கும் இளைஞர்கள் நான்கைந்து பேராக
சேர்ந்து வீடு எடுத்துத் தங்குவது உண்டு. அவர்களுக்குள் ரூம் மேட் என்பதைத்
தவிர பெரும்பாலும் வேறு உறவுகள் கிடையாது. எல்லோரும் குற்றச் செயலில்
கூட்டாளிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியிருக்க, எப்படி
அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள்?



‘எங்கள் சந்தேகத்தை உறுதி செய்துகொள்வதற்காக மட்டுமே அந்த வீட்டிற்குச்
சென்றோம். ஆனால், அவர்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்கள் அப்பாவிகளாக
இருந்தால், துப்பாக்கியை எடுத்து, போலீசை நோக்கிச் சுடுவார்களா? அந்த இரவு,
உண்மையில் அவர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. சி.சி.டி.வி.
பதிவில் இருக்கும் நபர் அங்கு இருக்கிறாரா என்பதுகூட எங்களுக்குத்
தெரியாது. ஆனால், அவர்கள் எவராக இருந்தாலும் போலீஸ் மீது அல்லது பொதுமக்கள்
மீது துப்பாக்கியை நீட்டுகிறார்கள் என்றால், அவர்கள் ஒரு கிரிமினல். ஒரு
குறிப்பிட்ட வழக்கில் அவர்கள் குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
காவல்துறையினருக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவதற்கு அவர்களுக்கு எந்த
உரிமையும் இல்லை’ என்கிறார் திரிபாதி.


கேள்வி - 5

போலீசாரை அரசு பாதுகாப்பது ஏன்?


"பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தேவையற்றது’ என்று அச்சம்பவம்
குறித்து விசாரணை நடத்திய கமிஷன் கூறியுள்ளது. ஆனால், அதில் தொடர்புடைய
போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருக்கோவிலூரில்
பழங்குடியினப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்
சாட்டப்பட்ட போலீசாரை இன்னும் கைது செய்யவில்லை. ‘அவர்களை ஏன் கைது
செய்யவில்லை?’ என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பல தடவை கண்டனம்
தெரிவித்தும்கூட அந்தப் போலீசாரைக் கைது செய்யவில்லை. சிதம்பரம் பத்மினி,
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப்
பிறகுதான் போலீசார் சிறைக்குச் சென்றனர். வாச்சாத்தி வழக்கிலும் அதுதான்
நிலை. உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும்
துவம்சம் செய்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தவறு செய்யும்
போலீசாரை அரசாங்கம் ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறது என்பது மிக முக்கியமான
கேள்வி.



‘போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால், போலீசாரின்உறுதி குலைந்துவிடும்’ என்பது
அரசின் வாதம். ஆனால், உண்மையான காரணம் வேறு. ‘எந்தக் கட்சி
ஆட்சிக்குவந்தாலும் அதன் ஏவல்துறையாக காவல்துறை மாறிவிடுகிறது. ஆளுங்கட்சி
தன் கையாளாகத்தான் போலீசாரைப் பயன்படுத்துகிறது. அதற்கு கைமாறாக போலீசார்
எத்தகைய தவறுகள், குற்றங்கள் செய்தாலும் அதைக் கண்டுகொள்வதில்லை என்பதில்
ஆளுங்கட்சி தெளிவாக உள்ளது. ‘நீ எனக்குசெய், நான் உனக்கு செய்கிறேன்’
என்பது காவல்துறைக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தம்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்கிறார் வழக்கறிஞர் சுரேஷ்.


கேள்வி - 6

குற்றவாளிகள் அனைவரும் இளைஞர்கள். ஏன்?


உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சுமார் 40 கோடிப்
பேர் இளைஞர்களாக உள்ளனர். குறைபாடுகளும், குளறுபடிகளும் கொண்ட கல்வி
முறை. அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம். நுகர்வுக்கலாச்சாரத்தின்
தாக்கத்தால் ஆசைகளும், அபிலாஷைகளும் அளவுகடந்துள்ளன. விரும்பியது
கிடைக்காத காரணத்தால் விரக்தியடைகின்றனர். எதைச் செய்தாவது விரும்பியதை
அடைய வேண்டும் என்கிற போக்கில் இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர். பெருங்குடி
வங்கிக்கொள்ளை மட்டுமல்ல, நாட்டில் அதிகரித்து வரும் பெரும்பாலான
குற்றச்செயல்களுக்கும் ஆணிவேர் அதுதான். அறுவைச் சிகிச்சை செய்யப்பட
வேண்டிய இடமும் அதுதான்.


துப்பாக்கியில் இருப்பது தோட்டாக்கள் மட்டுமே, தீர்வுகள் அல்ல.





பெட்டி செய்தி: நியாயமா?

வடநாட்டுக்
கொள்ளையன் என்று சந்தேகப்பட்டு, சென்னையில் இளைஞர் ஒருவரை பொதுமக்கள்
அடித்துத் துவைத்தனர். வங்கிக் கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு
நாட்களில் இச்சம்பவம் நிகழ்ந்தது.


சென்னையில்
வேளச்சேரி அருகே பள்ளிக்கரணை பகுதியில் சட்டை அணியாமல் ஓர் இளைஞர்
சாலையில் சென்றுகொண்டிருந்தார். தோற்றத்தில் வடநாட்டுக்காரர் மாதிரி
இருந்ததால், அவரை வங்கிக் கொள்ளையர் என்று நினைத்து அங்கிருந்த சிலர்
விரட்டியுள்ளனர். பயந்து ஓடிய அவர்,அங்கிருந்த சதுப்புநிலத்திற்குள்,
இறங்கியுள்ளார். விரட்டிச் சென்ற கும்பல் அவரைப் பிடித்து சரமாரியாகத்
தாக்கியது.



தரதரவென்று
இழுத்து வந்து மயக்கம் வரும் வரை தாக்கியது. அந்தச் சம்பவத்தை
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த வழியாகச் சென்றவர்களுமாக சுமார் 1,000
பேர் வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும்
தடுக்கவில்லை. 20 நிமிடங்களுக்கு இச்சம்பவம் நீடித்தது. சம்பவ இடத்திற்கு
போலீசார் வந்து, சந்தேகத்திற்குரிய நபரை காவல்நிலையத்திற்கு
கொண்டுசென்றனர்.


அவரது
பெயர் வெங்கட் ராவ் என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும்
தெரியவந்தது. அவர் வடநாட்டுக்காரர் அல்ல. ஆந்திராவைச் சேர்ந்தவர்.


இங்குள்ள
வடமாநிலத்தவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்கிற எண்ணத்தை விதைக்கும்
வகையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது வேதனைக்குரியது. சென்னையில்
வாழ்ந்த தமிழர்கள்தான் ராஜீவ் காந்தியைக்கொன்றுவிட்டனர் என்று சொல்லும்
போது நமக்கு ஏற்படும் வேதனையைப் போலத்தானே அவர்களுக்கும் இருக்கும்?
thanks:http://www.puthiyathalaimurai.com/this-week
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அணு உலை குறித்து எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்: அதிகாரிகள் அதிர்ச்சி
» ரவுடிக்கு என்கவுன்டர், உருவாக்குகிறவர்களுக்கு? -டைரக்டர் அனிஷ் கேள்வி
» பியானோ இசை எழுப்பும் புதுமையான படிக்கட்டுக்கள்
» நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள்!!
» தூங்கும் ஓட்டுனரை எழுப்பும் `ஸ்மார்ட் சீட்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum