TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பங்குச்சந்தை - தொடர் : 11

Go down

பங்குச்சந்தை - தொடர் : 11 Empty பங்குச்சந்தை - தொடர் : 11

Post by Tamil Thu Jan 07, 2010 12:14 pm

Share Split என்றால் என்ன? மேலும்....
சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது
பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம்
என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.




Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை
பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது
இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது
நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால
முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split
என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள்
இருக்கிறது.



ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share
Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக
இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு
பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம்
கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய்
முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய்
முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு
ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு
இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள்
இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது
லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை
பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது,
சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?



சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும்.
உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு
பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக
பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும்.



Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில்
இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று
Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை
சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது
Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன்
விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம்
விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது.



சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது?
ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை
வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus
Share தருவதற்கும் இது ஒரு காரணம்.



சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split
இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd.
என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய்
முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share
கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20
பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10
பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும்
Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை
Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும்
அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50
ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/-
ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/-
கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை
எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால்
அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே..
(Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு
படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படி இது. குறிப்பாக பங்கு
முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால்
Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன
பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால்
பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே
தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று
சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க
வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.



Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு
நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது
EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு
ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x
10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும்
பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த
EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட
கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS
குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை
என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா,
Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய
வேண்டும்.



இந்த பதிவில் சில நிறுவனங்களை குறிபிட்டிருக்கிறேன். இவை எல்லாம்
உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டது. மற்றபடி இந்த பங்குகளை வாங்கவோ
விற்கவோ பரிந்துரை செய்யவில்லை.



அடுத்து வரும் பதிவுகளில், ஒரு பங்கை வாங்கலாமா வேண்டாமா என்று
முடிவெடுக்கும் முன் EPS-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்போம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum